மலேசியா எயார்லைன்ஸ் ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்த விமானங்களைச் சேர்ப்பதாக அறிவிப்பு!
Tuesday, July 22nd, 2025
மலேசியா எயார்லைன்ஸ், அதன் பிராந்திய வலையமைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்த விமானங்களைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விமான நிறுவனமானது ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொழும்பு – கோலாலம்பூர் வழித்தடத்தில் எயார்பஸ் A330 விமானங்களை நிறுத்தும்
ஒவ்வொரு A330 விமானமும் 27 வர்த்தக சொகுசு இருக்கைகளையும் 261 பொருளாதார வகுப்பு இருக்கை களையும் கொண்டுள்ளது.
தெற்காசியாவில் மலேசியா எயார்லைன்ஸின் இருப்பை வலுப்படுத்துவதையும், இலங்கை – மலேசியாவிற்கிடையிலான பயணம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
000
Related posts:
ஹெலிகாப்டர் விபத்து : சூடான் 5 அதிகாரிகள் பலி!
கொரோனா தாக்கத்தின் எதிரொலி: ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் எயார் கனடா!
ஆசிரியர்களுக்கான 5 ஆயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவு இம்மாதம் கிடைக்கப்பெறும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன...
|
|
|


