அமைதி காலத்தில் சட்டத்தை மீறும் அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் – பொலிஸார்!
Sunday, May 4th, 2025
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் முடிவடைந்த இன்றுடன் தொடங்கும் அமைதி காலத்தில் சட்டத்தை மீறும் அனைவருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அமைதி காலத்தில் சட்டவிரோதமாக சுவரொட்டிகள், பதாகைகள் அல்லது கட்அவுட்களை யாராவது காட்சிப்படுத்தியிருந்தால், அவை அகற்றப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 65,000 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
000
Related posts:
பால்மா இறக்குமதி நிறுத்தப்படும் – எச்சரிக்கிறது பால்மா இறக்குமதியாளர் சங்கம்!
சிறுவர்கள் முகக்கவசம் அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்த...
புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை நிறுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!
|
|
|


