தென்னிலங்கையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து –30 பேர் படுகாயம்!
Tuesday, April 29th, 2025
தென்னிலங்கையில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து திக்வெல்ல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 30 பேர் காயமடைந்து நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் தங்காலை மருத்துவமனையிலும், பெலியத்த ஹத்போதிய மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
சல்வடோர் அணி வீரர்கள் இடைநிறுத்தம்
வாகன விபத்தில் இரு வெளிநாட்டவர் பலி!
2019 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!
|
|
|


