பாகிஸ்தானுடன் இந்தியா இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாது – பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா!
Friday, April 25th, 2025
ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடன் இந்தியா இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிலைப்பாடு காரணமாக இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் இனி இந்தியா விளையாடாது என அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும், பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி உயிர்களை இழந்த சம்பவத்தால், கிரிக்கெட் சமூகம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகவும் , இந்த கொடூரமான மற்றும் கோழைத்தனமான செயலை கண்டிக்கும் அதே வேளையில், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பிரேசில் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ பதவியேற்பு!
ஒத்துழைப்பு வழங்கத் தயார் – ஐ.நாவின் 75 ஆவது வருட நிறைவு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு புதுப்பிக்கப்படும் - வஜிர அபேவர்தன அறிவிப்பு!
|
|
|


