கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதை பொருள் மீட்பு!
Saturday, February 8th, 2025
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு கடற்கரையில் கொக்கைன் போதைப்பொருள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதற்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று 07.2.2025 வெற்றிலைக்கேணி கடற்படையினர் கட்டைக்காடு கடற்கரை பகுதியில் கண்காணிப்பை மேற்கொண்ட வேளை கடற்கரை பகுதியில் சிறு பொதியில் இருந்த 1 Kg கொக்கைன் போதை பொருளை மீட்டுள்ளனர்
மீட்கப்பட்ட போதைப்பொருளை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெற்றிலைக்கேணி கடற்படையினர், மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
000
Related posts:
அடுத்த மூன்று மாதங்களில் வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்பு - மத்திய வங்கி தெரிவிப்பு!
முதலாம் திகதிமுதல் இணையவழி பற்றுச்சீட்டு வழங்க நடவடிக்கை - மின்சார சபை அறிவிப்பு!.
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை - ஐவர் யாழ்.நீதவான் நீதிமன்றில் சாட்சியம்!
|
|
|


