விமானிகள் பணிப்புறக்கணிப்பு – விமான சேவைகள் இரத்து!
Tuesday, September 10th, 2019
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சம்பள பிரச்சினையை முன்வைத்து நேற்றுமுதல் இரண்டு நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தனர்.
பல மாதங்களாக சம்பள பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண முயற்சிகள் மேற்கொண்டதாகவும், தற்போது போராட்டத்தினால் பயணிகள் பாதிக்கப்பட்டமைக்கு வருந்துவதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
Related posts:
MT New Diamond கப்பலின் உரிமையாளர்களால் இலங்கைக்கு நட்ட ஈடு செலுத்தப்பட்டது!
எதிர்வரும் திங்கள்வரை மின் வெட்டு ஏற்படாது - மின் பாவனையில் சிக்கனம் பேணுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணை...
அமெரிக்க திறைசேரியின் பிரதிநிதிகள் குழு ஒன்றும் அடுத்தவாரம் இலங்கைக்கு வருகை – பிரதமர் தெரிவிப்பு!
|
|
|


