அமெரிக்காவின் பல்லாயிரக்கணக்கான டிக்டொக் பயனர்கள் சீன செயலியான ரெட் நோட் நோக்கி நகர்வு – வெளிநாட்டு ஊடகங்கள் தகவல்!
Thursday, January 16th, 2025
அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான டிக்டொக்(tiktok) பயனர்கள் இப்போது சீன செயலியான ரெட் நோட் (RedNote) நோக்கி திரும்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் டிக்டொக்கின் செயல்பாடுகளை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், டிக்டொக் பயனர்கள் ரெட் நோட்டை அணுகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
இருப்பினும், டிக்டொக் அமெரிக்காவில் அதன் செயல்பாடுகளை ஒருபோதும் அந்நாட்டுத் தொழிலதிபர்களுக்கு விற்காது என்று தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, டிக்டொக் பயனர்கள் சீன செயலியான ரெட் நோட் (RedNote) செயலியை நோக்கி திரும்புவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அமெரிக்காவில் 170 மில்லியன் டிக்டொக் பயனர்களின் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
000
Related posts:
கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்த நாடுகளில் இலங்கைக்கு 10 ஆவது இடம் !
சவுதி அரேபிய விமானநிலையம் மீது டிரோன் தாக்குதல் - இலங்கையர்கள் உட்பட 12 பேர் காயம்!
தகுதியுடையவர்களுக்கு மட்டும் ஒரு ஆயுதம் வழங்கப்படும் - பாதுகாப்புச் செயலாளர்!
|
|
|


