நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Friday, September 27th, 2024
இந்த வருடம் 38,874 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹாவை அண்மித்த பகுதிகளில் இருந்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக விசேட சமூக வைத்தியர் அனோஜா தீரசிங்க தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்த தொகையை குறைக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதுடன் கொழும்பு, களுத்துறை, கம்பஹா தவிர, கண்டி, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் இந்த சில வாரங்களில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்
00
Related posts:
மதிப்பீட்டு அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!
கொரோனா அச்சுறுத்தல் - இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டது !
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்தும் சீனா ஆதரவளிக்கும் - ஜனாதிபதியிடம் சீனா வெளிவிவகார பிரதி ...
|
|
|


