பேருந்து பின் சில்லுக்குள் அகப்பட்ட பெண் மரணம்!
Thursday, September 15th, 2016
பருத்தித்துறை நகர்ப்பகுதியில் வயோதிப மாது ஒருவர் பேருந்தின் பின் சில்லுக்குள் அகப்பட்டு மரண மடைந்துள்ளார்.
நேற்று புதன் கிழமை நண்பகல் பருத்தித்துறை நகரில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஐயனார் கலட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இ.கிருஸ்ணலீலா (வயது 68) என்ற வயோதிப மாதுவே மரணமடைந்தவராவார்.
நேற்றுமுற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான வயோதிப மாது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மணித்தியாலத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்துவண்டியை ஓட்டுநர் இயக்கிய வேளை விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பருத்தித்துறைப் பொலிஸார் சாரதியை கைது செய்துள்ளனர்.

Related posts:
இடையில் விலகியோருக்கு பொது மன்னிப்புக் காலம் அறிவிப்பு!
மின்சார கட்டணத்தை அதிகரிப்பதன் மூலம் மின்சார சபை மற்றும் மின்சார அமைச்சு தவிர வேறு எந்த அமைச்சும் எஞ...
வாகன பதிவு மென்பொருளின் பிரதியை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர...
|
|
|
இலங்கையர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் – திருத்தியமைக்கப்படுகிறது ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் ...
மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - புவ...
மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் சபையில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் கா...


