தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம்முதல் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
Monday, July 29th, 2024
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8000 ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என்றும், புதிய மாணவர்களுக்கான உதவித்தொகை செப்டம்பர் மாதம் முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு மூவாயிரம் ரூபாவினால் அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் பிரேரணையை சமர்ப்பித்து அனுமதியைப் பெற்றதாகவும், ஆனால் இதுவரையில் அமைச்சின் போதிய நிதி ஒதுக்கீடுகள் இல்லாத காரணத்தினால் அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தொல்லியல் திணைக்களம்: சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரித நடவடிக்கை – ஜனாதிபதி!
பிரதேச சபை வாகன சாரதிகளுக்கு பராமரிப்பு பற்றி பயிற்சி நெறி!
சிரேஷ்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டுதலில் வேலைத்திட்டங்களை முன்கொண்டு செல்லும் ஆர்வத்துடன...
|
|
|
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ...
டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் BTI பாக்டீரியா வெற்றி பெறவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி தகவல்!
தேர்தல் முரண்பாடுகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் வேலைத்திட்டம் - தேர்தல்கள...


