ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் – தேர்தல் ஆணைக்குழு!
Saturday, July 27th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு கோரலாம் என ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அடுத்த மாதம் 1 ஆம் திகதி அல்லது அதற்கு முன், தேர்தல் ஆணைக்குழுவிற்கு படிவங்களை அனுப்ப வேண்டும்.
ஒவ்வொரு விண்ணப்பமும் விண்ணப்பதாரரின் குடியிருப்பு பகுதி கிராம அதிகாரிகளால் சான்றளிக்கப்பட வேண்டும், இல்லையெனில் விண்ணப்பங்கள் செல்லாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
000
Related posts:
உள்ளூராட்சிச் சபைகளுக்கு தெரிவாகும் 2,000 பெண்கள்!
கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழக நகர அபிவிருத்தித்திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு அஜிட் நிவாட் கப்ர...
இலங்கையில் அணு மின்சார உற்பத்தி - முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டும் சீனா!
|
|
|


