ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை – மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
Sunday, July 7th, 2024
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என அதன் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தது தொடர்பில் மகிந்த ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இதன்போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.
தங்களது கட்சி இதுவரையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் வேட்பாளர் தொடர்பில் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது - ருவன் விஜயவர்தன!
ஒட்சிசனுக்கு தட்டுப்பாடு கிடையாது - அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
இலங்கைக்கு 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கு தயாராகும் இந்தியா!
|
|
|


