பாதசாரிகள் மீது கார் மோதி விபத்து – தென்கொரியாவில் 9 பேர் உயிரிழப்பு!
Tuesday, July 2nd, 2024
தென்கொரியாவின் தலைநகர் சியோலில் பாதசாரிகள் மீது கார் மோதிய விபத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த கார் தவறான திசையில் செலுத்தப்பட்டு பாதசாரிகள் மீது மோதுவதற்கு முன்னர் மேலும் 02 வாகனங்களுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தில் 06 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்றும் விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
000
Related posts:
மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்!
அக்கரப்பத்தனை நியூ கொலனி மக்கள் வாழும் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரிப்பு!
சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்கு விசேட குழு 02 - மாதங்களுள் அறிக்கை சமர்ப்பிக்கவும் பணிப்பு!
|
|
|


