இந்தோனேசியாவில் 10 ஆவது உலக நீர் உச்சி மாநாடு – உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பயணிக்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
Thursday, May 16th, 2024
இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அந்த நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமரர் சாந்தநாயகியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
மருத்துவ நிபுணர்களுக்கு பாரிய வெற்றிடங்கள் - சுகாதாரத் துறைக்கு கடுமையான அச்சுறுத்தல் என இலங்கையின் ...
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்துக்கு கடந்த வருடம் 120.3 பில்லியன் ரூபா இலாபம்!
|
|
|


