தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!.
Friday, May 10th, 2024
தேயிலைத் தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த உர மானியத்தை 10 ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம், இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள் உள்ளிட்டோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 10 ஏக்கருக்கு மாத்திரமே குறித்த உர மானியம் வழங்கப்பட்டு வந்துள்ளது.
எதிர்வரும் காலங்களில் அதனை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
சுவரொட்டிகளை அகற்ற 758 இலட்சம் ரூபா நிதி பொலிஸாருக்கு ஒதுக்கீடு - தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற...
கொரோனா தொடர்பில்ட நாடு செல்ல வேண்டிய திசையை மக்களே தீர்மானிக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங...
ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றத்தில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிசார் தெரிவிப...
|
|
|


