ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றத்தில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – பொலிசார் தெரிவிப்பு!
Wednesday, September 1st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 625 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இதன்போது 63 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 62 ஆயிரத்து 710 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் மற்றும் பிரவேசிக்கும் 13 இடங்களில் நேற்றையதினம் 858 வாகனங்களும் மற்றும் ஆயிரத்து 470 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கிண்ணியா படகுப்பாதை - ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்ப...
நிலவும் நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு தொடர்ந்து உதவ இந்தியா தயார் - இந்திய வெளிவிவகார...
டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டு வைத்தார் பாரதப் பிரலதமர மோடி!
|
|
|


