சாதாரண தரப் பரீட்சையை நாளை ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இம்முறை 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களுமாக மொத்தமாக 452,979 பரீட்சார்த்திகள் நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இதேவேளை விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பிரசார நடவடிக்கைகளின் போது விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவிப்பு!
கொரோனா தொற்று: கட்டாரிலுள்ள இலங்கை தூதரகம் பூட்டு!
வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் சுற்றுச்சூழல் தினத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வும் வீதி நாடகமும்!
|
|
|


