ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் பச்சிலைப்பள்ளி எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் வருமானம் மூன்று இலட்சம் – அமைச்சர் டக்ளசின் சரியான அரசியல் வழிநடத்தலால் சாத்தியமானது என நிர்வாகிகள் சுட்டிக்காட்டு!

Wednesday, April 17th, 2024

பளை பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடந்த மாதம் 9 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாத காலத்தில் சுமார் மூன்று இலட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக குறித்த பல நோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சரியான அரசியல் வழிநடத்தலால் தான் இது சாத்தியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முன்பதாக குறித்த அமைவிடத்தில் எரிபொருள் நிலையம் ஒன்றின் அவசியம் குறித்து பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தினரின் கோரிக்கை தொடர்பாக அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அடிக்கல் நாட்டி வைத்ததுடன்,  பல்வேறு நடைமுறை சிக்கல்களை களைந்து கடந்த மார்ச் 9 ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக திறந்தும் வைத்திருந்தார்.

இந்நிலையிலேயே பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் கடந்த ஒரு மாத வருமான ஈட்டல் 3 இலட்சம் ரூபாய் என நிர்வாகிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

முன்தாக குறித்த எரிபொருள் நிலையத்தை திறந்துவைத் நிகழ்வின்போது அமைச்சரின் தலையீட்டினால்தான் எரிபொருள் நிலைய திறப்பு சாத்தியமானது என்றும்  சரியான அரசியல் வழிநடத்தில் இருந்தால் எதுவும்’ சாத்தியமாகும் என்றும் கருத்து அப்பகுதி மக்களும் துறைசார் நிர்வாகிகளும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

கிடைக்கப் பெறுகின்ற வாய்ப்புகளை மக்களுக்காக பயன்படுத்திச் சாதித்துக் காட்டியவர்கள் நாங்கள் - டக்ளஸ் ...
தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுங்கள் - எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் ஈ.பி...
'கோமாதா உற்சவம் - 2022' சிறப்பு நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட நினைவுச் சின்னத்த...

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தசானந்தா ...
யாழ்ப்பாணத்தில் இந்து காலாசார அலுவல்கள் திணைக்களத்ததின் தேசிய விருது வழங்கும் வைபம் - பிரதம விருந்...
இந்திய கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை - ...