கோண்டாவில் கலைவாணி இந்து மயான பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – நிலமைகள் தொடர்பில் ஆராய்வு!

Thursday, April 4th, 2024


…..
சுமார் 150 வருடங்களுக்கு மேற்பட்ட  கலைவாணி வாழ் இந்து மயானம் தொடர்பில்  நிலவும்  பிரச்சினைகள் குறித்து ஆராயும் முகமாக குறித்த மயாண பகுதிக்கு களவிஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலமைகளை அவதானித்ததுடன் இரு தரப்பு மக்களின் அமிப்பிராயங்களை கேட்டறிந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் 28ஆம் திகதி கோண்டாவில் கலைவாணி சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததிருந்த நிலையில் நேரடியாக குறித்த பகுதிக்கு வருகைதந்து நிலமைகளை ஆராய்ந்து  சுமுகமான தீர்வை பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்த நிலையில் இன்றைய விஜயம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.
000

Related posts: