பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்க 20 விசேட பொலிஸ் குழுக்கள் – பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை!
Tuesday, March 19th, 2024
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட காவல்துறை குழுக்களை நிறுவுவதற்கு காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதிதாக நிறுவப்பட்ட குறித்த குழுக்கள் தற்போது செயற்படும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளன.
இதன்படி ஒவ்வொரு குழுவிலும் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஒருவரும், 04 புலனாய்வு அதிகாரிகள், 02 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 09 அதிகாரிகள் அடங்குகின்றனர்.
கடந்த சில வாரங்களாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்று வரும் பாதாள உலக செயற்பாடுகளை கருத்திற் கொண்டு காவல்துறை மா அதிபர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்காலத் தடை!
பெற்றோல் ஒரு லீற்றர் 20 ரூபாவால் அதிகரிப்பு - அனைத்து எரிபொருள்களும் புதிய விலையில் இன்றுமுதல் விற்...
விமான நிலையத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் - பிரமுகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
|
|
|


