கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேச மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பை நிறைவுசெய்தார் அமைச்சர் டக்ளஸ் – நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த மக்கள்!

Friday, March 8th, 2024

உடுப்பிட்டி கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய பிரதேசத்தில் வாழும் மக்களுக்கான குடிநீர் விநயோகம் நீண்டகாலமாக வழங்கப்படாதிருந்த நிலையில் அப்பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொணடு வந்திரந்தனர்.

இந்நிலையில் தமது பிரதேச மக்களுக்கு குடிநீரை பெற்றுத்தருமாறு சனசமூக நிலைய நிர்வாகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த பகுதி மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து நீர்விநியோகத்திற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றையதினம்(08.03.2024) குறித்த பகுதிக்கான குடிநீர் விநயோகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

உடுப்பிட்டி கம்பர்மலை கலைவாணி சனசமூக நிலைய தலைவர் கஜேந்திரன் செயலாளர் சதீஸ் ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது அமைச்சரது இந்த மக்கள் நலன் செவையை பாராட்டிய மக்கள் அமைச்சருக்கு தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts:

அசாதாரண காலங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் பணிபுரிகின்ற சிற்றூழியர்கள் நிரந்தரமாகக்கப்பட வேண்டும் - டக...
டக்ளஸ் எம்.பி தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ம...
அக்கராயன் ஏற்றுநீர்பாசனத் திட்டத்தை இயந்திரங்களைப் பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் – மின்சார இணைப்பின...

‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...
நெல்லுக்கான சந்தை வாய்ப்பு பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை - கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ்!
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிக்ளை ஆரம்பம் - ந...