மன்னாரில் மோட்டார் சைக்கிள் டிப்பர் கோர விபத்து – அருட்தந்தை டிலான் பலி!

Tuesday, March 5th, 2024

மன்னார் – அடம்பன் பொலிஸ் பிரிவில் உள்ள அடம்பன் நாற்சந்தியில் நேற்று (4) மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சலேசியன் சபையைச் சேர்ந்த 34 வயதான அருட்தந்தை மரிசால் டிலான் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் மன்னார் மடு தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விட்டு நேற்று மாலை திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மன்னார் – அடம்பன் பகுதியூடாக அருட்தந்தை டிலான் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன் போது படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலதிக சிகிசிச்சை வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் விபத்து தொடர்பான விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கொரோனா தொற்றாளிகள் சமூகத்திலிருந்து பதிவாகாமையை கருத்திற் கொண்டு நாடு மீளத் திறக்கப்படுகின்றது - சு...
முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இன்றுமுதல் கடவுச்சீட்டு விநியோகம் - குடிவரவு மற்றும் கு...
உயர்தர மாணவர்களுக்கு நிவாரண வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பு - அமைச்சர் பந்துல குணவர்த...