வல்வெட்டித்துறையில் வெடிபொருட்கள் மீட்பு!
Sunday, September 11th, 2016
வல்வெட்டித்துறை பகுதி தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள வேவிலந்தை பகுதி தோட்டக்கிணற்றிலேயே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேற்படி காணிகளை சில மாதங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்த ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கிணற்றை இறைத்து சுத்தப்படுத்தியுள்ளார். இதன் போது அதற்குள் வெடிபொருட்கள் காணப்பட்டதையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர் அறிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அக்கிணறு நேற்று தோண்டப்பட்ட போது அதிசக்கி வாய்ந்த இரண்டு கிளைமோர் குண்டுகள் மற்றும் பை ஒன்றில் கட்டப்பட்டிருந்த வெடி மருந்து என்பன மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட வெடிபொருட்கள் வல்லை வெளிப்பகுதியில் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
யாழ் நீதிமன்றில் ஹெரோயினை கைமாற்றியவர் வசமாக சிக்கினார்!
ஒரு செடியை நட்டு, சுற்றுச்சூழலுக்கு பங்களியுங்கள் - சுற்றுச்சூழல் அதிகார சபை நாட்டு மக்களிடம் கோரிக...
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


