ஜனாதிபதி ரணிலின் வடக்குக்கான வருகை வெற்றியடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, January 19th, 2024

ரணிலினுடைய வடக்குக்கான வருகை வெற்றியடைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

யாழ்  மாவட்ட செயலகத்தில் தொழில் முயற்சியாளர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நேற்றையதினம் (18.01.2024) கேட்டறிந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடமாகாணத்தில் இருக்க கூடிய தொழில் முயற்சியாளர்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டுவதுதான் இதன் நோக்கம்.

ஜனாதிபதி வடக்கு மாகாணத்தில் வந்திருந்த நேரத்தில் இங்கு பலதரப்பட்டவர்களை அவர் சந்தித்திருக்கிறார். ஆனால் எல்லோருடனும் அவர்கள் எதிர்பாராதமாதிரி அவரால் சந்திக்க முடியவில்லை என்றாலும் அவரினுடைய சந்திப்பில் இங்கே இருக்க கூடிய பிரச்சினைகள் என்ன என்பது தொடர்பில் அவர் தெளிவாக, விளக்கமாக புரிந்துகொண்டார்.

இதற்கு முன்னரும் அவர் பல சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பயணம் தனக்கு திருப்திகரமாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க கோரிக்கைகளை  தன்னுடைய கவனத்துக்கு கொண்டு வர நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சொல்லியிருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும் -...
சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கூட்...
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின்அதனை மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியு...