இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம் – வெளியிடப்பட்டது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!
Friday, November 24th, 2023
இரண்டு அமைச்சுகளின் செயலாளர் நியமனம் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக மாபா பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், சுகாதார அமைச்சின் செயலாளராக வைத்தியர் பாலித குணரத்ன மஹிபால நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல்களின்படி, மாபா பத்திரன கடந்த 21 ஆம் திகதிமுதல் எதிர்வரும் டிசம்பர் 31 வரை ஒரு மாத காலத்திற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக பணியாற்றவுள்ளார்.
அத்துடன், வைத்தியர் பாலித குணரத்ன மஹிபால, கடந்த 20 ஆம் திகதிமுதல் ஒருவருட காலத்திற்கு சுகாதார அமைச்சின் செயலாளராக தனது பதவி வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பின்லாந்தின் ஒத்துழைப்புடன் 13 வருட கல்வி வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
நடைமுறைக்கு வந்தது இலஞ்சீற் பாவனைத் தடை - மேலும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக தடை செய்யவ...
சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் செப்டெம்பர் 20 ஆரம்பம் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெர...
|
|
|


