உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதன் எதிரொலி – சாதாரண தரப் பரீட்சையும் அடுத்த வருடம் மே வரை பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
Monday, October 9th, 2023
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு, சாதாரண தரப் பரீட்சைகள் மே மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் வழமை போன்று திட்டமிடப்பட்ட திகதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ரஷ்யக் கொடியுடன் வரும் எந்தவொரு விமானமும் தடுத்து வைக்கப்படாது -போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த...
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரி...
நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


