தேவைக்கு மேலதிகமாக 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Wednesday, September 27th, 2023
நாட்டில் 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி, தேவைக்கு மேலதிகமாக இருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பெரும்போகம் மற்றும் சிறுபோகத்தில் மொத்த நெல் அறுவடை சுமார் 52 இலட்சம் மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது.
அதனூடாக, 31 இலட்சம் மெட்ரிக் டன் அளவு அரிசியை உற்பத்தி செய்யமுடியும் எனவம் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை நாட்டின் வருடாந்த அரிசித் தேவை சுமார் 24 இலட்சம் மெட்ரி தொன்களாகும். எனவே, 7 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவைக்கு மேலதிகமாக உள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அடுத்த பெரும்போக அறுவடை வரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமரர் யேசுதாசன் அமினதாப்பின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
வடமராட்சி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட கடற்தொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணை வழங்கிவைப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் 4269 பேருக்கு டெங்கு தொற்று!
|
|
|


