இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல் – கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேறுமாறு இந்தியா உத்தரவு!
Tuesday, September 19th, 2023
இந்தியாவை தளமாகக் கொண்ட மூத்த கனேடிய தூதரக அதிகாரி ஒருவரை வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (19.09.2023) கனேடிய உயர்ஸ்தானிகர் வெளியுறவு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட இராஜதந்திரி அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவின் உள் விவகாரங்களில் கனேடிய ராஜதந்திரியின் தலையீடு மற்றும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கனடாவில் சீக்கிய காலிஸ்தானிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பில், இந்திய ராஜதந்திரி ஒருவரை கனேடிய அரசாங்கம் நாட்டில் இருந்து வெளியேறுமாறு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவு : ஏழு நாள் அரசு முறை துக்கம்!
2 அடி நீளத்தில் வாக்குச் சீட்டு !
ஜனாதிபதித் தேர்தலுக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு - , தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில...
|
|
|


