இன்று முதல் பரவிப்பாஞ்சான் மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
Wednesday, September 7th, 2016
பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஏழு நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த பிரதேச மக்கள் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது போராட்டம் தொடர்பில் இதுவரை எந்தவொருவரும் உரிய பதிலை வழங்காத காரணத்தால் இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர். நல்லாட்சி அரசாங்கமே நாங்கள் உங்கள் நாட்டு மக்களே , எங்களையும் சற்றுத்திரும்பிப்பார் என பொறிக்கப்பட்ட வாசகங்களுடன் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடலம் உறவினரிடம் ஒப்படைப்பு!
எதிர்வரும் போகத்துக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடு இன்றி வழங்கத் நடவடிக்கை - கமத்தொழில் அமைச்சர் ம...
சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு - ஒத்துழைப்போருக்கு உதவிகளை ...
|
|
|


