உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி சீனா செல்கின்றார் ஜனாதிபதி!
Saturday, September 9th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த விஜயத்தின் போது சீன ஜனாதிபதி Xi Jinping உள்ளிட்ட சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் இலங்கை தனது இருதரப்பு கடன்களை மறுசீரமைப்பதில் சீனாவுடன் தொடர்ந்து ஈடுபட்டுள்ள நிலையில் இந்த விஜயம் அமையவுள்ளது.
கடந்த வருடம் ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் சீனாவிற்கு மேற்கொண்டுள்ள உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது
Related posts:
அரச தலைவர் கட்டளையிட்டும் கூட வடக்கு அதிகாரிகள் அக்கறை செலுத்துவதில்லை: விவசாயிகள் கவலை!
அரசியலில் எனது இறுதி நாட்களில் இருக்கிறேன் என்பதை நான் அறிவேன் - ஆனால் நிதி அமைச்சராக இருந்து செய்ய ...
5,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போயிங் விமானத்திலிருந்து வந்த MAYDAY அவசர அழைப்பு!
|
|
|


