கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒதுக்கீடு – காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவிப்பு!
Wednesday, August 9th, 2023
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதி கிடைக்கவுள்ளதாக காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் ரி.பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொல்பொருள் திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்கத்தின் பிரதிநிதிகள் சேர்ந்து நாளை குறித்த பிரதேசத்தினை அளவிட்டு அதற்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து அகழ்வுப்பணிக்கான திகதி குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி வி.கே.நிரஞ்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊர்காவற்றுறைப் பிரதேசத்துக்கு எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்துத் தரக் கோரிக்கை!
புங்குடுதீவு குழாய்வழி நீர்வழங்கலை மீண்டும் உயிரூட்ட வேண்டும் - பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன் கோரி...
பசியை போக்க முந்திரி பழங்களை பறித்த ஒருவர் சுட்டுக் கொலை!
|
|
|


