கோழி இறைச்சி மற்றும் மீனின் விலைகள் அதிகரிப்பு தற்காலிகமானதே – வர்த்தக அமைச்சு தெரிவிப்பு!

Monday, June 5th, 2023

அண்மைக்காலமாக கோழி இறைச்சி மற்றும் மீனின் விலைகள் அதிகரித்துள்ளமை தற்காலிகமானதே என என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் ஓரிரு வாரங்களுக்கு இதே விலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், விலைகளை தன்னிச்சையாக அதிகரிக்க முடியாது எனவும், தவறிழைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கிடையில், அடுத்த இரண்டு வாரங்களில் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்ப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்திரம் இரத்து - இலங்கை போக்குவரத்து சபை ...
யாழ்ப்பாணம் முல்லைத்தீவு உட்பட வடக்கின் 5 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சர...
உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவின் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் ஏலத்தில் - இராஜாங்க அமைச்சர் ...