பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை ‘வலுவான அர்ப்பணிப்பை’ காட்டி வருகின்றது – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் பாராட்டு!
Friday, June 2nd, 2023
பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை ‘வலுவான அர்ப்பணிப்பை’ காட்டி வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான தமது விஜயத்தின் போது அவர் இதனை தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் இந்த வேகத்தை இலங்கை அரசாங்கம் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இலங்கையின் கடனாளிகளுடனான தொடர்ச்சியான வெளிப்படையுடன் கூடிய உரையாடல் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை அடைய உதவும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை!
இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்குவதை கண்காணிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் தீவிரமா...
பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
|
|
|


