சிறுவர்களை கடத்துவதாக வெளியாகும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் – பொலிஸ் தலைமையகம் கோரிக்கை!

Friday, June 2nd, 2023

சிறுவர்களை கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிச் செல்லும் போலி செய்திகளுக்கு ஏமாற வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் மீண்டும் பொதுமக்களை கோரியுள்ளது.

அவ்வாறான போலித் தகவல்களை பரிமாற்றுபவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சிறார்கள் கடத்தப்படவுள்ளதாக அண்மைய சில நாட்களாக கிடைக்கப்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, போலியானவை என கண்டறியப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறுவர்கள் கடத்தல் முயற்சி சம்பவம் தொடர்பாக, அவசியம் என கூறி பொலிஸ் எந்த ஒரு நபரைப் பற்றியும் தகவல் வெளியிடவில்லை.

இதன்காரணமாக அவ்வாறான போலி பிரசாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேநேரம், அவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் குழப்பமடைய வேண்டாம் என்றும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பொது அமைப்புகள் ஒற்றுமையாக செயற்படும்போதுதான் அபிவிருத்தியில் முன்னேற்றம் காணமுடியும் - ஐங்கரன்!
விசேட வைத்திய நிபுணர்கள் பரிந்துரை - இலங்கையில் சிறுவர்களுக்கான தடுப்பூசித் திட்டம் வைத்தியசாலைகளிலு...
உள்ளூராட்சி தேர்தலுக்காக 7,000 கண்காணிப்பாளர்கள் கடமையில் - தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தகவல்!