இந்தோனேசியாவில் இரண்டு அதிசக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!
Sunday, April 23rd, 2023
இந்தோனேசியாவின் கெபுலாவான் பட்டு (Kepulauan Batu) பிரதேசத்தில் இன்று அதிகாலையில், சுமார் 6 மெக்னிடியூட் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை முதல் நிலநடுக்கம், 6.1 மெக்னிடியூட் அளவிலான கெபுலாவான் பட்டுவைத் தாக்கியது. அதைத் தொடர்ந்து சில மணிநேரங்களுக்குப் பிறகு 5.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கம் 43 கிலோமீற்றர் ஆழத்திலும், இரண்டாவது நிலநடுக்கம் 40 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டதாக EMSC தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல் : யாழ் மாவட்டத்தின் ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிப்பு!
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஜூலை 1 முதல் வழங்கப்படும் - வர்த்தமானி அ...
2025 நிதியாண்டின் வரவிருக்கும் மாதங்களுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை நாடாளுமன்றில் இன்று சமர்ப...
|
|
|


