இலங்கையில் அதிகூடிய மின்சார தேவை நேற்று பதிவானது!
Thursday, April 20th, 2023
அண்மைக் காலங்களில் இலங்கையின் நாளொன்றுக்கான அதிகூடிய மின்சார தேவை நேற்று (19) பதிவானதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம், தேவைக்கு ஏற்ப நிகர மின் உற்பத்தி 49.53 கிகா வோட்டாக பதிவானதாகவ இன்று ( 20) ட்விட்டரில் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இன்று காலை பதிவு செய்யப்பட்ட உண்மையான தேவையின்படி, இன்று மின் உற்பத்தி 50 கிகா வோட்டை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அண்மையில் நிறுவப்பட்ட ஹம்பாந்தோட்டை, டீசலில் இயங்கும் மின்பிறப்பாக்கிகள் உட்பட இலங்கை மின்சார சபையின் அனைத்து அனல்நிலையங்களும் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பகிடிவதை தொடர்பில் 300 முறைப்பாடுகள் - உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு!
இந்தியா - இலங்கைக்கு இடையே சாதாரண விமான சேவைகைள மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை - இந்தியாவில் உள்ள இலங்...
இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தி - யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இலங்கை...
|
|
|


