சர்வதேச நாணய நிதியத்த்தின் கோரிக்கை – இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி!
Friday, March 24th, 2023
இலங்கையில் தற்காலிக மாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இறக்குமதி தடை நீக்கப்பட வேண்டும் என்பதற்கு அமைய இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தடை செய்யப்பட்ட 101 வகையான பொருட்களை மீண்டும் இலங்கைக்குக் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனம் உட்பட உலோகங்கள், கேக், பிளாஸ்டிக், சீஸ், இறப்பர், மரச்சாமான்கள், சோப்புகள், காய் கறிகள் உள்ளிட்ட பொருட்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடியவர் கைது!
கொறோனா வைரஸ் கொறோனா வைரஸ்: இலங்கையை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பு - சுகாதார அமைச்சர் ...
எழுதும் விடயங்களுக்குப் பொறுப்புக்கு கூறுவதற்கு ஊடவியலாளர்கள் தயாராக இருந்தால் எந்த சட்டம் வந்தாலும்...
|
|
|


