ரூபாவின் பெறுமதி கடந்த வார இறுதியில் 7.8 சதவீதத்தால் குறைந்துள்ளது – மத்திய வங்கி தெரிவிப்பு!

Monday, March 20th, 2023

கடந்த வார இறுதியில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி 7.8 சதவீதத்தால் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரூபாவுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 7.6 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

அத்துடன் ஜப்பானிய யென், யூரோ மற்றும் ஸ்ரேலிங் பவுண் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது இலங்கை ரூபா அதிகளவில் பெறுமதி குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அரசியல்வாதிகள் மத்தியிலும் ஆயுதக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது- நீதிபதி இளஞ்செழியன் !
சங்கானை பட்டின சபையின் வளர்ச்சிக்கு அயாராது உழைத்தவர்களில் அமரர் சண்முகரத்தினம் - அனுதாப செய்தியில் ...
பட்டதாரி அரச ஊழியர்களுக்கு பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான...