டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு – எரிபொருள், மின்சாரக் கட்டணத்தை குறையுங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்து!

Monday, March 20th, 2023

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருள் மற்றும் மின் கட்டணங்களை கணிசமான விகிதத்தில் குறைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையும் இலங்கை பெட்ரோலிய கூட்டு தாபனமும் தற்போது பாரிய இலாபத்தை ஈட்டுகின்றன என்றும் இதேநேரம் எரிபொருள் மற்றும் நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் நடைமுறையில் ஊழல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாலும், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைக்கப்பட்டதாலும் அமெரிக்க டொலருக்கான தேவை குறைந்துள்ளது என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஆகவே வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை செலுத்த ஆரம்பித்தால் அல்லது இறக்குமதியை அனுமதித்தால் டொலரின் மதிப்பு அதிகரிக்கும் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இன்று இரவுமுதல் திங்கட்கிழமை வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி கிடையாது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 48 குற்றவாளிகளில் 30 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் போதைப்பொருள் க...
வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும்   இடம்கொடுக்க கூடாது - சி.வி.கே.சிவஞானம்!