இளம் வர்த்தகர் சுலைமான் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் சிக்கியது!
Friday, September 2nd, 2016
பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் முகம்மட் சகீப் சுலைமான் கடத்தல் விவகாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வான் கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து, இன்று
கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பம்பலப்பிட்டி பகுதியில், குறித்த வர்த்தகரின் வீட்டின் முன்னால் வைத்து, அவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். பின்னர், அவரின் சடலம் மாவனல்ல பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. சகீப் சுலைமான் கடத்தல் மற்றும் கொலை தொடர்பில், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் இதுவரை 07 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts:
நிதிக் கடன்கள் பெறுவதில் ஏமாறும் கிராமப் பெண்கள்: நல்லூர் பிரதேச செயலர் தெரிவிப்பு !
பிரபல பாடகர் சாந்தன் காலமானார்!
வழமைக்கு திரும்பியது புகையிரத சேவைகள்!
|
|
|


