யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை !
Thursday, September 1st, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வெள்ளிக்கிழமை(02) யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி நாளை வெள்ளிக்கிழமை(02) காலை-08.30 மணி முதல் மாலை-5.30 மணி வரை புன்னாலைக்கட்டுவன், புன்னாலைக்கட்டுவன் வடக்கு, குரும்பசிட்டி, வயாவிளான், மயிலங்காட்டின் ஒரு பகுதி, அச்செழு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
வாகனத்தின் முன் கண்ணாடிகள் கறுப்பாக இருந்தால் நடவடிக்கை!
அதிகளவான வீதித்தடைகள் – பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டு இறுக்கமான கண்காணிப்பில் யாழ் நகர்!
பிளாஸ்ரிக் பொருட்களுக்கு வருகிறது தடை – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் என அமைச்சர் மஹிந்த அ...
|
|
|


