இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவால் குறைப்பு – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
Wednesday, March 1st, 2023
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கபடவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
முன்பதாக மண்ணெண்ணெய் விலைகளை குறைக்கும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியிரந்தார்..
இதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305 ரூபாவாகும் என அந்த கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என கனிய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், தொழிற்துறைக்குப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலை 134 ரூபாவினால் (புதிய விலை 330 ரூபா) குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் தொழில்நுட்பத்தை அழித்தொழிக்கும் எட்கா வேண்டாம் - ரில்வின் சில்வா
ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு உண்டு - அரசாங்க தகவல் திணைக்களப்பணிப்பாளர் நாயகம்!
நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிப்பு - வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வ...
|
|
|


