தேர்தலுக்கான பண விவகாரத்தில் தலையிடுங்கள் – சபாநாயகருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
Sunday, February 26th, 2023
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பணம் தொடர்பான பிரச்சினையில் தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
நேற்றிரவு இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் அன்றையதினம் நடைபெறாது என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் காரணமாக உறைய தினத்தில் வாக்கெடுப்பை நடத்த முடியாது என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட பகுதிகளில் அகழ்வு பணிகள் ஆரம்பம் !
உடைந்து விபத்துக்குள்ளான பாலத்தை புதுப்பிக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப...
நிலவும் சீரற்ற காலநிலை - 20 மாவட்டங்களில் 80, 642 குடும்பங்களைச் சேர்ந்த 276, 550 பேர் பாதிப்பு!
|
|
|


