நீர் கட்டணம் 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா நிலுவை – தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டு!
Saturday, February 25th, 2023
நுகர்வோரிடமிருந்து 8 ஆயிரத்து 400 மில்லியன் ரூபாய் நிலுவை கட்டணத்தை அறவிட வேண்டியுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், நீர் கட்டணம் செலுத்துவது 40 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் 6 ஆயிரத்து 200 மில்லியன் ரூபாய் கட்டணத்தை வீட்டு நீர் பாவனையாளர்களே செலுத்த வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மின் கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளமையால், நீர் கட்டணத்தையும் அதிகரிப்பதற்கான பிரேரணை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முச்சக்கரவண்டிக்கு ஆசனப்பட்டி அறிமுகப்படுத்த நடவடிக்கை!
விவசாயிகள் பாதுகாக்கப்படுவர் - மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - ஜனாதிபதி !
மக்கள் மீது புதிய வரிகளை சுமத்த முடியாது - வருமான வரி செலுத்தாதவர்களிடமே வரி அறவிடப்பட வேண்டும் - ந...
|
|
|


