புதிய மதுவரி சட்டமூலத்தை தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பம் – மதுவரி திணைக்களம் அறிவிப்பு!
Saturday, February 4th, 2023
புதிய மதுவரி சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான கபில குமாரசிறி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மதுவரி கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கான பணிப்புரை மதுவரித் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பாதீட்டுக்கு அமைய இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மதுவரி கட்டளைச் சட்டத்திற்கு பதிலாக மதுவரி சட்டத்தை தயாரிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக மதுவரித் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமும் ஊடகப் பேச்சாளருமான கபில குமாரசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்று உயர்தரப் பரீட்சை ஆரம்பம்!
கடன் மறுசீரமைப்பிற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும் - பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவி...
தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் அழுத்தம் வழங்க முடியாது! - இலங்கை இறைமையுள்ள நாடு என பிரதமர் தெரிவிப்ப...
|
|
|


