தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டில் 411.9 பில்லியன் ரூபா வருமானம் – தேயிலை ஏற்றுமதி துறை தெரிவிப்பு!

Monday, January 23rd, 2023

தேயிலை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசெம்பர் வரை 411.9 பில்லியன் ரூபா வருவாயாக கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் முழு வருடத்திலும் கிடைக்கப்பெற்ற அதிகூடிய வருவாய் இது என தேயிலை ஏற்றுமதி தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

2021ஆம் ஆண்டு தேயிலை ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் 147.74 பில்லியன் ரூபா அதிகம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஈராக்கே இலங்கை தேயிலையை அதிக அளவில் இறக்குமதி செய்த நாடாக திகழ்கின்றது.

அதனைத் தொடர்ந்து, ரஷ்யா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இலங்கை தேயிலையை இறக்குமதி செய்வதில அடுத்ததடுத்த இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

நாம் செய்யும் பணிகள் ஒவ்வொன்றும் மக்கள் மயப்படுத்தப்படவேண்டும் - ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட நிர்வாக...
அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான பயிற்சித் திட்டம் இன்றுமுதல் கட்டம் கட்...
பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அழைப்பு இன்றுமுதல் மேற்கொள்ளப்படும் - பல்கலைக்கழக மானியங்கள்...

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை - பி...
குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவிப்பு!
அரசினால் வழங்கப்படும் தொழிற்சார் கற்கை நெறிகளை கற்பதற்கான ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது - மாகாண பண...