உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்பினரையும் கலந்துரையாடலுக்கு அழைக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்!
Sunday, January 22nd, 2023
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களை கலந்துரையாடலுக்கு அழைக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் திகதியை அறிவித்த பிறகு அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணைக்குழு சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இதன்போது அறிவிக்கப்படவுள்ளது.
தேர்தல் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்க ஆணைக்குழுவின் சிறப்புக் கூட்டமும் அடுத்த சில நாட்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுகாதார சேவைக்கான வரி முழுமையாக நீக்கப்படும் !
சிறுபோக அறுவடை புதிய முறையில் கொள்வனவு - நெல் சந்தைப்படுத்தல் சபை!
நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருகின்றது - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன...
|
|
|


