தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேறுவதற்கு இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு வேண்டும் – இந்திய வெளியுறவு அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, January 20th, 2023


இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உட்பட அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கும் இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், கடற்றொழில் அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

இதன்போதே, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த வேண்டுகோள்கள் முன்வைக்கப்பட்டன. – 20.01.2023

Related posts:

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் தமிழர்களின் மனதை புண்படுத்தாத வகையில் நடைபெறவேண்டு...
ஆலயத்தின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வியாபார நிலையங்களை பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவத...
மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும்  – ஈ.பி.டி.பியின் செயலாளர் ...

தேசிய நல்லிணக்க உருவாக்கத்தில் இரு மொழிக்கொள்கை அமுலாக்கம் அவசியமாகும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
இந்த ஆட்சியில் யாழ்ப்பாணத்தில் பொருளாதார மையம் அமைக்கப்படுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரது சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் த...