சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரை கடனை இலங்கை எதிர்பார்க்கிறது – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Thursday, December 15th, 2022
2023 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலரை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளள அவர் மேலும் கூறுகையில் –
சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரை கடனை இலங்கை எதிர்பார்க்கிறது. அத்துடன் அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அரச நிறுவனங்கள் சிலவற்றை, மறுசீரமைப்பதில் ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார். அதன் மூலம் 2 முதல் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடிந்தால், திறைசேரியின் இருப்புக்கள் பலப்படுத்தப்படும் என்று அமைச்சர் சப்ரி சப்ரி தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் 60000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை - கல்வி அமைச்சர்!
போத்தல் நீரின் தரம் தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு!
பொலிஸார் மீது குண்டுத் தாக்குதல் - துன்னாலையை சேர்ந்தவர் கைது!
|
|
|


