உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கூறி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
Tuesday, December 13th, 2022
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ,ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சுதந்திர லங்கா சபை மற்றும் பல சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, லக்ஷ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜீ.எல்.பீரிஸ், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தேசிய பாதுகாப்பு சட்டமூலம் உருவாக்கப்படும்!
பொதுத் தேர்தலை பிற்போட அரசாங்கம் திட்டம் - நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன!
ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து அமைச்சர் அலி சப்ரி பேச்சு!
|
|
|


